Tuesday, May 25, 2010

வாஷிங்க்டன் டிரிப்பும் செங்கமலம் சிரிப்பும்

மக்களே மக்களுக்கு மக்களே  இந்த அமெரிக்கா மாநகரத்துக்கு வந்ததுல இருந்து இது வரைக்கும் எங்கயுமே போனதே இல்ல, கடந்த பத்து மாசமா என் டேமேஜர் நாய் சேகர் வரிசையா ஆணி புடுங்க வச்சதுல வீடு  ,ட்ரைன்,பக்கத்துல எப்பயும் போல வெள்ளைகார மற்றும் கருப்பு கிழவிகள்னு வாழ்கை நம்ம டாக்டர்  விஜய் படங்கள் மாதிரி ஒரே மாதிரி போய்ட்டு இருந்துது, அப்பதான் திடூர்னு ஒரு டவுட்டு வந்துது, நம்ம அமெரிக்காவுல இருக்கோம்னு ஊர்ல எல்லா பய புள்ளையும் நம்பிட்டு இருக்கு (முக்கியமா பொண்ண பெத்த மாமனார்கள்) ஆனா ஒரு போட்டோ கூட அமெரிக்கா  பின்னணியில இல்லையே, வரலாறு ரெம்ப முக்கியமசேனு யோசிச்சப்பதான் திடீர்னு "பெருசு" கால் பண்ணுச்சு.

இந்த இடத்துல பெருசு யாருன்னு சொல்லணும்,  பெருசு சமீபதுலத்தான் பழக்கமானாறு அமெரிககாவுக்கு ஒரு வேல விஷயமா பாமிலிய விட்டுட்டு வந்துருக்காரு, ஊரு கோயம்புதுரு, ஆளு பஸ்சுக்கு மற்ற கண்ணாடிய மாட்டிக்குட்டு பாக்யராஜ் ஸ்டைல இருப்பாரு , ஏழு கழுத வயசானாலும் இன்னும் மன்மதனுக்கு மாமா பையன்னு மனசுல நெனப்பு.அந்த பெருசுதான் கால் பண்ணி "சிவா வர்ற வீக் எண்டு எங்கயாவது போலாமா" நு கேட்டுச்சு, ஆஹா ...சிக்குனாண்டா சித்தப்பு ...அப்படின்னு மனசுல நெனச்சுகுட்டு ஒகே ..பெருசு போலாம் ..எடத்த நீயே சூஸ் பண்ணுனு சொல்லிட்டேன் (நம்மளுகுத்தான் எந்த இடமும் தெரியாதே!)

பெருசு டக்குனு "வாஷிங்டன்" போலாம்னு சொல்லுச்சு..ஆஹா நம்மளுக்கு வாஷ் பண்றதுக்கு எங்க போறதுனே தெரியாது , இதுல வாஷிங்க்டனான்னு மனசுல நெனச்சுகுட்டு சரி போலாம் ஆனா எப்படி போறது, இது என்ன நம்ம ஊரா
SETC புடிச்சு போறதுக்கு. ஆனா பெருசு சொல்லுச்சு "நான் நல்லா டிரைவ் பண்ணுவ்வேன்,நாம கார் வாடகைக்கு எடுத்து போலாம்"...பெருசோட கண்ணாடிய பாத்தா "வரும்  ஆனா வராது" தான் யாபகம் வந்துது .அப்பதான் பிரெண்ட் ஒருத்தன் ஐடியா அய்யாசாமி சொன்னான் "சீனாக்காரன் package டூர் வச்சுருகான் அதுல போடா
 மச்சி ரெம்ப சீப்பா இருக்குமுனான்.

சரின்னு அவன் பேச்சை கேட்டு டிக்கட்டையும் புக் பண்ணியாச்சு,பெருசும் ரோஸ்பவுடர்,ஜவ்வாதுன்னு பர்சேஸ ஆரம்ப்சிருச்சு.சரி நம்மளும் பெட்டில என்ன இருக்குனு பாத்தா, ஊர்ல இருந்து வரும்போது கொண்டு வந்தா பவர் சோப்பு பனியனும் , தி-நகர் பிளாட்பார்ம்ல வாங்குன நைட் பேண்டும்தான் இருக்கு, ஆஹா இது வேலைக்கு ஆகாது ,வெள்ளைக்கார பொன்னுகல்லாம் வர இடத்துல பந்தாவா போகணும்னு , இந்த ஊர் சரவணா ஸ்டோருக்கு (JC penny) போயி நாலு டி-ஷர்ட் அள்ளிபோட்டுட்டு டூருக்கு ரெடி ஆயாச்சு.

சனிக்கிழமையும் வந்துர்ச்சு, காலைல சீக்கிரமா எந்திரிச்சி பந்தாவா ரயில்வே ஸ்டேசனுக்கு போயி பெருசுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு லைட்டா ஒரு கதம்ப சுமெல் வரவும்  பக்கத்துல இருந்த கறுப்பன பார்த்தா , அவன் வேட்டைக்காரன் படம் பாத்துட்டு theatara  விட்டு வெளிய வரவான எப்படி பப்ளிக் கேவலமா பார்க்குமோ அப்படி என்னைய பார்க்குறான். ஆஹா நம்ம குளிச்சி சென்டேல்லாம் போட்டுட்டுத்தான வந்துருகோம்னு, தூரத்துல பார்த்தா , நம்ம பெருசு செவப்பு பேண்ட்டு ,பச்சை சட்ட ,கண்ணுல MGR கண்ணாடி , மூஞ்சில திப்பி திப்ப்பியா கரகாட்டம் ஆடறவங்க மாதிரி ரோஸ்பவுடர் , ஜவ்வாது போட்டுட்டு ஜிகு ஜிக்கான்னு வந்து நிக்கறாரு,இப்பதான் தெரிஞ்சுது அந்த வாடை எங்க இருந்து வந்துதுன்னு.
பெருசு அப்படியே நம்ம அத பார்கறத பாத்துட்டு  என் தோள்ல தட்டி கொடுத்து ஒரு சிரிப்பு சிரிச்சுது(அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்னா அவர் அழக
 பார்த்து நாம பொறாமை பட்றோமாமா,அதனால நம்மள ஆறுதல் படுத்துது)

ட்ரைன் வரவும் அப்படியே பெருச பூ போல உள்ள கூட்டிட்டு போயாச்சு, அப்படியே நியூயார்க்ல  இறங்கி சைனா டவுனுக்கு நடக்க ஆரம்பிச்சோம்.... ஆரம்பிச்சா.....(செங்கமலம் சிரிப்பு அடுத்த பதிவில்).

No comments:

Post a Comment